மேட்டுப்பாளையத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் கீரைத்துரை காவல்நிலைய போலீசார் ராஜேஷ், ஸ்டாலின் என்ற இரண்டு வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



இதனைக் கண்டித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...