பனிக்காலத்தில் விமானங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்கள் என்ன? - மூத்த விமானி பகத்சிங் தகவல்!

பனிக்காலத்தில் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகளை விட தரையிறங்கிய பின் விமான நிறுத்துமிடம் வரை ஓட்டி செல்வதே மிகுந்த சவாலானது என விமானி பகத்சிங் தெரிவித்தார்.



கோவை: பனிக்காலத்தில் விமானங்கள் இயக்குவது குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கூறியதாவது:



இந்தியா மட்டுமின்றி உலகளவில் பனிக்காலத்தில் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிரமங்களை விமானிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய நவீன உலகில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் விமானத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் டெல்லி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் மிக அதிகளவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் விமானங்கள் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் விமானிங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



இருப்பினும் மிகுந்த சவால் என்பது விமானத்தை தரையிறக்கிய பின் ஓடுதளத்தில் இருந்து பத்திரமாக விமானம் நிறுத்துமிடம் வரை ஓட்டி செல்வதில் தான் உள்ளது.

பொதுவாக விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் விமானிகளுக்கு பல்வேறு சைகைகள் மூலம் உதவி செய்வார்கள். பனிக்காலங்களில் குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.



விமானத்தின் அருகே அவர்கள் நின்ற போதும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பணியை துரிதமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

அதிக பனிமூட்டம் நிலவும் விமான நிலையங்களில் உதாரணமாக சாதாரண நாட்களில் ஒரு மணிநேரத்துக்கு 10 விமானங்களை இயக்கினால், பனிக்காலத்தில் அதே ஒரு மணிநேரத்தில் 2 விமானங்களை மட்டுமே இயக்க முடியும். அந்த அளவு நிலைமை படுமோசமாக இருக்கும்.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நடவடிக்கையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...