உடுமலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - 2 பேரை கைது செய்த போலீஸ்

உடுமலை அருகே உணவகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பட்டப்பகலில் திருடிச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்னதர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது49). இவர் நேற்று முன்தினம் காலை தனது நண்பரை சந்திப்பதற்காக குமரலிங்கம் வந்துள்ளார்.

அப்போது, உடுமலை-பழனி சாலையில் உள்ள உணவகத்தின் முன்புறம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சாப்பிட சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணபிரான், அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் நிறைந்த முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அக்கம்பக்கத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மற்றும் ரோந்துப் பணியினை போலீசார் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்து, அதன் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை சுரண்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களைப் பிடித்து நடத்திய விசாரணையில் அது உணவகத்தின் முன் திருடப்பட்ட கண்ணபிரானின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட இருவரும், குமரலிங்கம் இந்திரா வீதியைச் சேர்ந்த அருள்ராஜ் (வயது38) மற்றும் ஜாஹிர் உசேன் வீதியைச் சேர்ந்த பகவதி (வயது27) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

பிடிப்பட்ட இரண்டு பேரும் கடைசி வரை திருடியதை ஒத்துக் கொள்ளாததோடு, 'அது எங்க வண்டி சார், கொடுங்க சார்.. நாங்க கிளம்பணும்' என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...