கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கிக் கடன் பெற்ற வழக்கு - முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை!

கோவையில் கனரா வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கி கடன் பெற்ற வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சாமாளாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி மற்றும் மாரப்பன். ஜவுளி தொழில் நடத்திவரும் இவர்கள், விசைத்தறி வாங்குவதாக கூறி போலி ஆவணம் சமர்பித்து ரூ.9.97 லட்சம் கனரா வங்கியில் கடன் பெற்றனர். அந்தத் தொகையை மாற்று தேவைக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக, கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கந்தசாமி, மாரப்பன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.40,000 அபராதமும், ஆவணங்களை முறையாக ஆராயாமல் கடன் வழங்கியதால் கனரா வங்கிக்கு ரூ.10.20 லட்சம் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த வங்கியின் மேலாளர் ராமச்சந்திரன் என்பவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.80,000 அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...