'தலைக்கவசம் இனி கட்டாயம்..!' - 15 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு!

கோவை மாநகரில் 100 சதவீதம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தும் வகையில், 15 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கோவை: வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வலியுறுத்தி கோவையில் 15 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகரில் இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதனை கடுமையாக்கும் வகையில் இன்று ஒரு நாள் முழுவதும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து, ரூ.1000 அபராதம் மற்றும் 3 மணி நேரம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என கோவை மாநகர போலீசார் அறிவித்தனர்.

அதன்படி, இன்று காலை முதல் கோவை மாநகரம் முழுவதும் காளப்பட்டி சாலை, கொடிசியா, நவ இந்தியா சந்திப்பு, ராமகிருஷ்ணா கல்லூரி, சக்தி ரோடு, துடியலூர் சாலை, காந்திபுரம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, பேரூர் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, திவான் பகதூர் சாலை ஆகிய 15 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சோதனை சாவடிக்கும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், நவ இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் மாநகர போலீஸ் ஆணையர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்களைப் பிடித்து அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, 3 மணி நேரம் விழிப்புணர்வு வகுப்பும் எடுக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...