கிணத்துக்கடவு அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு - சாலையைக் கடக்க முயன்றபோது விபத்து

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதால், சம்பவ இடத்தில் பலியானார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரம் பகுதி சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி கமலவேணி இன்று காலை கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டிக்காபாளையத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து வேகமாக வந்த கார் கமலவேணி மீது மோதியது. பலத்த காயமடைந்த கமலவேணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் கமலவேணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த விசாகரத்தினம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...