ராமநாதபுரம் மேம்பாலத்திற்கு கலைஞர் பெயரை சூட்டுங்கள்..! - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட கோரி திமுகவை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: ராமநாதபுரம் மேம்பாலத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை - திருச்சி சாலையில் ராமநாதபுரம் பகுதியில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேம்பாலம் கடந்த ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.



இந்த மேம்பாலத்திற்கு எந்த பெயரும் வைக்காததால், தற்போது “கலைஞரின் தமிழ்நாடு மேம்பாலம்” என்ற பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



திமுகவை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

அவர் இங்கிருக்கும் போது திரைப்படங்களுக்கான வசனங்கள், அரசியல் முன்னெடுப்புகள் ஆகியவை இங்கிருந்து தான் துவங்கியது. ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் வரை வழக்கமாக அவர் நடந்து செல்லும் வழியாக இருந்தது.

மேலும் பல்வேறு திட்டங்களை அவர் முதல்வராக இருந்தபோது கோவைக்கு வழங்கி உள்ளார். எனவே தற்போது அவர் வாழ்ந்த இந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...