உடுமலையில் நடுகல் வழிபாடு - வரலாற்று ஆய்வாளர்கள் களஆய்வு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பாரம்பரியமான கோயில்களில் உள்ள நடுகல்களை வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாரம்பரிய நடுகல் வழிபாட தொடர்பான சின்னங்களை வரலாற்று ஆய்வுத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

மடத்துக்குளம் தாலுக்கா நரசிங்கபுரத்திலிருந்து கருப்புசாமி புதூருக்கு செல்லும் சாலையில், பாரம்பரியமிக்க கோயில்களில் நடுகற்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.



இதையடுத்து, வரலாற்று ஆய்வாளர்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள கோயிலின் கட்டிடத்திற்குள் இருக்கும் நடுகற்களை கன்னிமார் சாமி என்றும், அதற்கு அருகில் இலந்தை மரத்தின் அடியில் இருக்கும் நடுகற்களை வீரமாத்தி அம்மன் என்றும், எதிரில் இருக்கும் பெரிய அளவிலான சுமார் 5 அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட நினைவு நடுக்கற்களை மாலையம்மன் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவர் ஆய்வாளர்கள் விஜயலட்சுமி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரியர் ராபின் கேட்டபோது,

நடுகல் வழிபாடு என்பது கொங்கு நாட்டில் பண்டைய மக்கள், இனக்குழுக்களாக வாழ்ந்து கால்நடைகளை சொத்துக்களாகவே வளர்த்து வந்துள்ளனர். இன குழுக்களின் பிரிவுகளிடையே மற்றொரு குழுவினர் கால்நடைகளை கவர்ந்து செல்வது, அவ்வாறு கவர்ந்து செல்லப்பட்ட கால்நடைகளை வீரம் செறிந்தவர்கள் மீட்டு வருவார்கள்.

இந்த கால்நடை மீட்பு போர்க்களத்தில் இயற்கைக்கும் வீரர்களுக்கும் நடுகற்கள் வைக்கப்படும் நடைமுறை இருந்தது. இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல்நட்டு வழிபடுவதும் பண்டைய தமிழ் மரபு, என்றனர்.

இதற்கிடையில், உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் பாரம்பரியமான வரலாற்று பொக்கிஷங்கள் சிதலமடைந்து காணப்படுவதால், தொல்லியல் துறையினர், அவை குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...