திருப்பூரில் புத்தகத் திருவிழா - புத்தகங்களை வெளியிட்ட பள்ளி மாணவர்கள்!

திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தின் சார்பில் சிறுவர்களுக்கான 50 புத்தகங்களை மாணவ, மாணவிகள் வெளியிட்டனர்.



திருப்பூர்: புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயம் சார்பில் சிறார்களுக்கான புத்தகங்கள் வெளியீடு விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ் சார்பாக 19ஆவது புத்தகத் திருவிழா, காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்வான இன்று பாரதி புத்தகாலயம் சார்பில் சிறார்களுக்கான புத்தகங்கள் வெளியீடு விழா நடைபெற்றது.



இதில் திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 50 புத்தகங்களை 50 மாணவ, மாணவிகள் வெளியிட அதனை 50 மாணவ, மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.



புத்தகங்களை வெளியிட்ட மாணவர்கள், புத்தகங்களை ஏற்கனவே படித்து புத்தகத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினர். இதில் மாணவ,மாணவிகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...