திருப்பூரில் புதர் மண்டி கிடக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் - சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மருள்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட 300 குடியிருப்புகள் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ளது கண்ணமநாயக்கனூர் ஊராட்சி. இங்குள்ள மருள்பட்டி பகுதியில் 1994ஆம் ஆண்டில் வீட்டு வசதி வாரியத்தால், 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதி களிமண் பரப்பாக இருப்பதால், வீடுகள் கட்ட எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும், 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 300 வீடுகள் கட்டும் பணிகள் வீட்டு வசதி வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஏ, பி, சி, என மூன்று பிரிவுகளில் வீடுகளும், அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

இதனிடையே, போதிய பேருந்து வசதி இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களால், வீடுகளை ஏலம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் இதர தரப்பினர் முன் வரவில்லை.



இதனால், 300 வீடுகளும் காட்சிப்பொருளாக மாறி 20 ஏக்கரில் அமைந்த குடியிருப்பு வளாகம் முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது.

இந்நிலையில், வீடுகளில் இருந்த இரும்பு ஜன்னல்கள், தொட்டி உட்பட பல்வேறு பொருட்கள் ஏற்கனவே மாயமான நிலையில், தற்போது சில வீடுகள் இடிந்து, கான்கிரீட் மேற்கூரையில் இருக்கும் கம்பிகள் வெளியே தெரிகிறது.



குடியிருப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் எந்தப் பயன்பாடும் இல்லாமல் பாழாகிவிட்ட நிலையில், சில வீடுகளின் சுவர்களை இடித்து, செங்கற்கள் திருடப்பட்டுள்ளன.



புதர் மண்டி பரிதாப நிலையில் காணப்படும் இக்குடியிருப்புகள் தற்போது சமூக விரோத செயல்களுக்கு மட்டுமே பயன்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



பயன்பாடு இல்லாமல், இடிந்து விழுந்து வீணாகி வரும் இந்த குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய திட்டத்தை வீட்டு வசதி வாரியத்தினர் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், நீண்ட காலமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கேட்டு அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...