நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்!

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தினை ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு.



கோவை: தமிழகத்தில் உணவகங்கள் மீது உணவின் தரம், கலப்படம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கிவைத்தார். அதன்படி, இந்த உணவு பகுப்பாய்வு வாகனங்கள் முதல் கட்டமாக கோவை சேலம் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.



அதன்படி, கோவை வந்த நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் உட்பட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் 30 வகையான உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டறிய முடியும். மேலும், கலப்படம் குறித்த விளக்க படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உணவு பகுப்பாய்வு வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...