கோவை மாநகராட்சி கூட்டத்தில் குடும்பத்துடன் இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கோவை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென டீசல் கேனுடன் வந்த இளைஞர், தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.



கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



அப்போது மதியம் சுமார் ஒரு மணியளவில் கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பு வந்த இளைஞர் ஒருவர் தனது கை குழந்தை மற்றும் மனைவியுடன் டீசல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.



இந்நிலையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு இளைஞரின் கையிலிருந்த கேனை பிடுங்கினர்.

அவரிடம் விசாரித்த போது, கோவை குனியம்புத்தூரை சேர்ந்த நவீன் என்றும், சுமார் 5 ஆண்டுகளாக மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்ததாகவும், தனக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்ட போது சரிவரப் பதில் கூறவில்லை எனவும் அலட்சியமாக நடத்துவதாகவும், பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டுவதாகவும், துணை மேயர் உடன் உள்ள டேவிட் என்பவரும், உதவிப் பொறியாளர் ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதனிடையே தற்கொலைக்கு முயன்றவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞரின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...