அன்னூர் அருகே குப்பத்தொட்டியில் பச்சிளம் குழந்தை மீட்பு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.



கோவை: அன்னூர் அருகே சாணம்பாளையம் பகுதியில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை சாலையோர குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம்பாளையம், கட்டபொம்மன் நகரில் இன்று தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் குப்பை தொட்டிக்கு அருகே கட்டைப்பை ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

சந்தேகமடைந்த பணியாளர்கள் கட்டைப் பையை திறந்து பார்த்தபோது அதில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றாத நிலையில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அன்னூர் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுற்று வட்டாரத்தில் அரசு மகப்பேறு சிகிச்சை மையங்களில், 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பட்டியலை அன்னூர் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் முறை தவறி பிறந்ததால் குழந்தை சாலையில் வீசப்பட்டதா?, பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலையோரம் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...