அன்னூர் அருகே குப்பத்தொட்டியில் பச்சிளம் குழந்தை மீட்பு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.



கோவை: அன்னூர் அருகே சாணம்பாளையம் பகுதியில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை சாலையோர குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம்பாளையம், கட்டபொம்மன் நகரில் இன்று தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் குப்பை தொட்டிக்கு அருகே கட்டைப்பை ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

சந்தேகமடைந்த பணியாளர்கள் கட்டைப் பையை திறந்து பார்த்தபோது அதில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றாத நிலையில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அன்னூர் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுற்று வட்டாரத்தில் அரசு மகப்பேறு சிகிச்சை மையங்களில், 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பட்டியலை அன்னூர் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் முறை தவறி பிறந்ததால் குழந்தை சாலையில் வீசப்பட்டதா?, பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலையோரம் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...