தென்னை விவசாயத்தை பாதுகாக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை!

தென்னை விவசாயத்தைப் பாதுகாக்கும் விதமாக, பிஏபி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை.



கோவை: தென்னை விவசாயத்தைக் காக்க அதிகாரிகளுக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாகக் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:



கடந்த 60 ஆண்டு காலமாக பிஏபி நீரை நம்பி பிரதான கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாயிகள் ஆயக்கட்டுக்கு உட்படாத விவசாய நிலங்களுக்குக் கிணற்று நீர் மூலமாக விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் சில விவசாய அமைப்புகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் கொடுத்த புகாரின் பேரில், பிஏபி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.



இதனால் நீண்ட கால நிலை பயிர்களான தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிரதான கால்வாயில் கரையோர விவசாயிகளும் விவசாயிகளே என்பதைக் கருத்தில் கொண்டு பிஏபி பாசனத் திட்டத்தைப் பலப்படுத்த நீர் ஆதாரத்தைப் பெருக்க பல்வேறு வழியில் உள்ளதைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதலமைச்சர் மூலம் விவசாயிகளின் பிரச்சனை குறித்துப் பேச நேரம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு விவசாயச் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கிருஷ்ணசாமி, ராமசாமி, ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...