ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பார்வர்டு பிளாக் ஆதரவு! - தேசிய துணைத்தலைவர் கதிரவன் தகவல்

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பிரித்து வைத்துவிட்டு நாங்கள் சேர்த்து வைப்பதாக நாடகமாடி வருகிறார் என பார்வர்டு பிளாக் தேசிய துணைத்தலைவர் கதிரவன் குற்றச்சாட்டு.



திருப்பூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பிரச்சாரம் செய்யும் என அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மன்னரைப் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 8ஆவது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் கதிரவன் கூறியுள்ளதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வருகின்ற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நிச்சயம் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பிரித்து வைத்துவிட்டு நாங்கள் சேர்த்து வைப்பதாக நாடகமாடி வருகிறார். தமிழக பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் நிச்சயம் வெற்றி பெறும். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இம்முயற்சியை மேற்கொள்ளும்.

இவ்வாறு, கதிரவன் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...