வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து இடையூறு செய்த ஒருவர் கைது மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவு.


கோவை: வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று நகர்மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு,செயற்பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கூட்டம் நடந்தது கொண்டு இருக்கும்போது கூட்டத்தில் அத்துமீறி 50-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். இதனால் நகர மன்ற கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.



பின் நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு அரசுப் பணியைச் செய்யவிடாமலும் நகர மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தாலும்,கொலை மிரட்டல் விட்டனர் என்று 15 பேர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆண்ட்ரூஸ் என்பவரைக் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவு ஆனதால் அவர்களைத் தேடி வருகின்றனர்.

நகர மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து கூட்டத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...