பல்லடம் கேத்தனூரில் மாரியம்மன், காசி விஸ்வநாதர் கோயில்கள் குடமுழுக்கு விழா - பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இரண்டு திருக்கோவில்களும் 36 வருடங்களுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.



கடந்த 30 ஆம் தேதி விநாயகர் வழிபாடு, நவகிரக ஹோமத்தோடு விழா தொடங்கி, யாகங்கள் நடத்தப்பட்டு, கலசாபிஷேகம், விநாயகர் பூஜை மற்றும் நேற்று திருமுறை பாராயணம், பூதசுத்தி புண்யாகம், யாகபூஜை, தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.



இன்று காலை வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரின் மூலவர் சிலைகளுக்கும் கோவிலின் கோபுர கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவினை நடத்தி வைத்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், அடுத்த 48 நாட்களுக்கு வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதருக்கு மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...