பொள்ளாச்சி பாலாற்றங்கரை ஆஞ்சநேய கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் தரிசனம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக் கூட்டம் நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர் ஒரே கருவறையில் மூலவர் சமதள பரப்பில் இருப்பதும் நின்ற கோலத்தில் மூர்த்தியாக இருப்பதும் தமிழகத்தில் இங்கு மட்டும்தான் இருப்பது என்பது சிறப்பு அம்சமாக சொல்லப்படுகிறது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து நடைபெற்றது.



இதில், கும்பம் எழுந்தருளி திருக்கோவிலில் பவனி வந்து பின்னர் ராஜகோபுரம் ஆஞ்சநேயர் மூலவர் கோபுரம் ராமர் பாத கோபுரம், மற்றும் விநாயகர் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் ஆனைமலை பொள்ளாச்சி கோவை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...