கோவை வீரபாண்டி அருகே கேரள லாட்டரி சீட்டு விற்பனை - இருவர் கைது..!

வீரபாண்டியை அடுத்த காளிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வீரபாண்டியை அடுத்த காளிபாளையம் பகுதியில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு சுற்றிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் சின்ன கருப்புசாமி என்பது தெரியவந்தது.

இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிவந்து திருட்டுத்தனமாக விற்று வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து கேரள லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...