தாராபுரம் அருகே பைக்கில் இருந்து தடுமாறி விழுந்ததில் பெண் பலி

புதுக்கோட்டையிலிருந்து குண்டடம் செல்ல பைக்கில் குடும்பத்துடன் வந்த உணவக உரிமையாளர் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பைக்கில் சென்ற போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒய்யான் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்-திவ்யா தம்பதி. இவரது மகன் சிவபாலன்(8), மகள் சிவன்யஸ்ரீ(6), ஆகியோருடன் குண்டடம் அடுத்த மேட்டுக் கடையைப் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விஸ்வநாதன் அப்பகுதியில் சாலையோர தள்ளுவண்டி உணவகம் கடை நடத்தி வருகிறார். இவர் பொங்கலுக்காக குடும்பத்துடன் பைக்கில் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு குண்டடம் செல்ல குடும்பத்துடன் தாராபுரம் வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

வரப்பாளையம் அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதால் பின்னால் அமர்ந்திருந்த மனைவி திவ்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே திவ்யா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...