கோவையில் வீட்டின் முன்பு நிறுத்திய இருசக்கர வாகனம் மாயம் - போலீசார் விசாரணை

துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்திருந்த இருசக்கர வாகனம் மாயமான புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வடமதுரை வி.எஸ்.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டியோ இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து பெரியசாமி துடியலூர் காவல் நிலையத்தில் தனது டியோ இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார் காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...