நீலகிரியில் பழங்குடியினப் பெண்ணை அடித்துக்கொன்ற புலி - 15 நவீன தானியங்கி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு!

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் பழங்குடியின பெண்ணை அடித்துக் கொன்ற புலியை 15 நவீன தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய பகுதியில் உள்ள தெப்பக்காட்டில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க மாரி என்ற பழங்குடியின பெண்ணை புலி ஒன்று அடித்து கொன்றது. புதருக்குள் பெண்ணின் உடலை இழுத்து சென்ற புலி, அவரது கை மற்றும் கால்களை சாப்பிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.



இதனையடுத்து, மாரியின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என தெப்பக்காடு பகுதியைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் புலியை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் உயிரிழந்த மாறியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.



இந்த நிலையில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 இடங்களில் நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.



அதில், பதிவாகும் புலியின் புகைப்படங்களை வைத்து எந்த புலி, ஆட்கொல்லி புலியாக மாறி உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் அதை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...