கோவை சோமனூரில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை சோமனூர் சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், படுகாயமடைந்த, பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி- கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.



சோமனூர் சாலையை கடக்க முயன்றபோது, கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம், இவர்களின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.



இந்த விபத்தில், மல்லிகாவுடன் பயணித்த இரண்டு குழந்தைகளும், இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே இருசக்கர வாகனங்கள் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன் சாலையை கடக்க முயல்வதும், கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக நேருக்கு நேராக மோதி, அனைவரும் தூக்கி வீசப்பட் காட்சிகள் பதிவாகியுள்ளது .

சினிமா சண்டைக்காட்சிகளைப் போன்று அரங்கேறியுள்ள இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...