அண்ணாவின் நினைவு நாளில் எடப்பாடி ஆட்சி அமைய சபதம் எடுத்த அதிமுகவினர்!

கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சபதம் ஏற்றனர்.



கோவை: பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி கோவையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய சபதம் ஏற்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகள் பொதுமக்கள் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் அவிநாசி சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இதய தெய்வம் மாளிகையில் அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 40 இடங்களை பிடிக்கும் என்றும், வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியே அமையும் என அண்ணா நினைவு நாளில் சத்தியவாக்கு” என சபதம் எடுத்தனர்.



இந்நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன், கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜே.ஆர்.ஜெயராம் உட்பட அதிமுகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...