பிப்.18ல் கோவை திரும்பும் ஆதியோகி ரத யாத்திரை - ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு!

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தரிசனத்திற்காக சென்றுள்ள ஆதியோகி ரத யாத்திரை, பிப்ரவரி 18ம் தேதி வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரிக்கு கோவை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: உலகில்‌ தோன்றிய முதல்‌ யோகியான சிவன்‌ சப்தரிஷிகளுக்கு (அகத்தியர்‌ உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம்‌ முழுவதையும்‌ பரிமாறினார்‌. சப்தரிஷிகள்‌ ஒவ்வொருவரும்‌, அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன்‌ உலகின்‌ பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர்‌. இது ஆன்மீகத்தில்‌ மாபெரும்‌ அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

யோகா கலாச்சாரம்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவுதற்கு முழுமுதற்காரணமாக இருக்கும்‌ ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும்‌ விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்‌ 112 அடியில்‌ ஆதியோகியின்‌ மார்பளவு திருவுருவம்‌ சத்குரு அவர்களால்‌ 2017-ம்‌ ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதியோகியை தரிசித்து அவரின்‌ அருளை பெறுவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர்‌.

இந்நிலையில்‌, கோவையில்‌ செயல்படும்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும்‌ ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாமல்‌ இருக்கும்‌ மக்கள்‌ தங்கள்‌ ஊர்களிலேயே அவரை தரிசிப்பதற்கு இந்த யாத்திரை வாய்ப்பளித்துவருகிறது.

அதன்படி, 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன்‌ கூடிய இந்த ரதங்கள்‌ தமிழகத்தின்‌ 4 திசைகளிலும்‌ பயணித்து கொண்டு இருக்கின்றன. கோவையில்‌ இருந்து கடந்த மாதம்‌ புறப்பட்ட 5 ஆதியோகி ரதங்கள்‌ 30-க்கும்‌ மேற்பட்ட மாவட்டங்களில்‌ சுமார்‌ 25 ஆயிரம்‌ கி.மீ பயணித்து மஹாசிவராத்திரியன்று மீண்டும்‌ கோவைக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 18-ம்‌ தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும்‌, அந்தந்த மாவட்டங்களிலும்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வருமாறு பொதுமக்களுக்கு இந்த யாத்திரையின்போது அழைப்பு விடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...