திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் பதவியேற்பு

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்ட நிலையில் அவருக்கு மேயர் தினேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பவன் குமார் ஜி.கிரியப்பனவர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

தமிழகம் முழுவதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த கிராந்தி குமார், கோவை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக, கடலூர் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன் குமார் ஜி.கிரியப்பனவர் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.



இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



அவருக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் ஏற்கனவே, தாராபுரம் துணை ஆட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...