சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், 2ம்நிலை காவலர் பணிக்கு உடல்தகுதித் தேர்வு - கோவையில் ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

கோவையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாகவுள்ள சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள், 2 ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.



கோவை: தமிழகம் முழுவதும் 3,552 சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், 2ம்நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது.



இதில் பங்கேற்குமாறு மேற்கு மண்டலத்தை சேர்ந்த 548 பெண்களுக்கும், 623 ஆண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



கோவை பிஆர்எஸ் மைதானத்தில் ஆண்களுக்கும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களுக்கும் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.



இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.



நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேர்வுக்கு இன்று 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 185 பெண்கள் இன்று கலந்துகொண்டனர்.



இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உயரம் அளத்தல் போன்றவை இன்று மேற்கொள்ளப்பட்டது.



இதேபோல், பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இன்று 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில், 316 பேர் மட்டுமே பங்கேற்றனர்.



இவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் உயரம் மற்றும் உடல் அளவு அளத்தல், 1500 மீட்டர் உடல் தகுதி ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...