வால்பாறை வனச்சரக அலுவலகம் அருகே உலா வந்த கரடிகள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கோவை வால்பாறை வனச்சரக அலுவலக வளாகத்தில் குட்டியுடன் உலா வந்த கரடிகளை, அங்கிருந்த ஊழியர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக அலுவலகம் அருகே கரடிகள் உலா வந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், சிறுத்தை, கரடி, மான் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அருகேயுள்ள வால்பாறை வனச்சரக அலுவலகம் முன்பு இன்று காலை குட்டியுடன் இருந்த கரடி ஒன்று உலா வந்தது. அப்போது அங்கிருந்த உழியர்கள் கரடிகளை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்பு கரடிகள் வனப்பகுதிக்குள் சென்றன. இந்நிலையில், ஊழியர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...