பல்லடம் அருகே சாலையில் குழாய் உடைந்து பீறிட்டு வெளியேறிய தண்ணீர் - பரபரப்பு

பல்லடம் அடுத்த அவிநாசி - மங்கலம் சாலையில் 4ஆம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய் உடைந்து 15 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு தண்ணீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடி வீணாகியது. குழாய் வால்வில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக உடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் திடீரென 15 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமுகை அருகே சுமைதாங்கி பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி, மோப்பிரிப்பாளையம், பல்லடம் வழியாக திருப்பூர் வரை நான்காம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய் செல்கிறது.



இந்நிலையில் அவிநாசி - மங்கலம் சாலையில் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பீறிட்டு தண்ணீர் வெளியேறியது. பிரதான குழாய் உடைந்ததால் 25 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறிய நிலையில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதனிடையே குழாய் வால்வில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு உடைந்த குழாயினை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...