நீலகிரி மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் தொந்தரவு அளிக்கும் வீடியோ வைரல்!

நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் மின்வாரிய குடியிருப்பு அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அச்சுறுத்தும் வகையில், வாகனத்தை முன்னும் பின்னுமாக இயக்கி புகைப்படம் எடுத்து தொந்தரவு அளிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் கெத்தை மலைபாதையில் 48 கொண்டை ஊசி வளைவுகளை உள்ளன. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் இந்த மலைப்பாதையை உள்ளூர் மக்கள் கோவை சென்று வரவும், கேரளா மாநில சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரவும் பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதிக்குள் இந்த சாலை இருப்பதால் காட்டு யானைகள் அடிக்கடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது வழக்கமாக உள்ளது.



இந்நிலையில், கெத்தை மின்வாரிய குடியிருப்பை ஒட்டி உள்ள மாரியம்மன் கோவில் அருகே காட்டுயானைக்கூட்டம் ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானை கூட்டம் சாலை ஓரத்திற்கு வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சில வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை கூட்டத்தின் அருகில் வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்தனர்.



இதனைக் கண்டு ஆத்திரமடைந்த யானை ஒன்று துரத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் வாகனத்தை முன்னும் பின்னுமாக இயக்கி புகைப்படம் எடுத்தும் தொந்தரவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோர்மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...