ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்- ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அதிரடி


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, சமூக விரோதிகள் சிலர் போராட்ட களத்திற்குள் புகுந்ததாக கூறிய போலீசார், ஆயிரகணக்கான இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். 

சென்னை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய தடியடியில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்தது. இதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் ஆய்வு நடத்திய ராஜேஸ்வரன் இன்று காலை கோவை வந்தார்.



கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்திய வ.உ.சி. மைதானம், காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும்ம் கொடீசியா மைதானம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக நீதிபதி ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பவ இடங்களுக்கு சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறேன். விசாரணையின் தொடக்கமாக கலவரம் நடந்ததாக கூறப்படும் இடங்களில் பொருட்களின் சேத நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். தொடர்ந்து, 15 நாட்களுக்குள் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க இருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட பொதுமக்கள் எந்த வித பயமும் இன்றி என்னிடம் புகார் அளிக்கலாம். பொதுமக்களிடம் புகார்களை கேட்டறிவதற்கு முன்னதாக செய்தித்தாள்களில் வாயிலாக முறையான அறிவிப்பு வெளியாகும். கோவையை தொடர்ந்து, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.



இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகர காவல் துணை ஆணையர்  (சட்டம் & ஒழுங்கு ) லட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...