கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ(எம்) கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறும் கோவை அரசு மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறுநீரகவியல் துறையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் கழிவறைகள் மிகக் குறைவாக உள்ளதுடன், அவையும் போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு கூடுதல் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, சிபிஐ(எம்) கோவை மாவட்டக் குழு சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவக் கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது சிபிஐ(எம்) கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.எஸ். கனகராஜ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...