கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அவினாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



உப்பிலிபாளையம் முதல் கே.எம்.சி.ஹெச் வரையிலான பகுதியில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் இரு புறங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தற்போது நிழற்குடை இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழைக்காலம் மற்றும் கோடைக்காலங்களில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த பேருந்து நிறுத்தங்களில் புதிதாக நிழற்குடை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பழுதடைந்துள்ள நிழற்குடைகளை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பேருந்து நிறுத்தங்களின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தார். புதிய நிழற்குடை அமைக்க வேண்டிய இடங்கள் மற்றும் பழுதடைந்த நிழற்குடைகளை புனரமைக்க வேண்டிய இடங்களை அடையாளம் கண்டார்.

இந்த ஆய்வின் போது, கோவை மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர்கள் கணேசன், தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் ஜெகதீசன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஜெகன், தேவதாஸ், உதவி செயற்பொறியாளர்கள் சரவணக்குமார் (பொ), இளங்கோவன் (பொ), போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

இந்த முயற்சி பொது போக்குவரத்து பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...