கோவை வேளாண்‌ பல்கலை.யில் 2 நாள் புத்தகக்‌ கண்காட்சி - ஏராளமான புத்தகங்கள் விற்பனை!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2 நாள் புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேவையான புத்தங்களை வாங்கி சென்றனர்.


கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக‌ மாணவர்‌ நல மையத்தின்‌ சார்பில் 2 நாள்‌ புத்தகக்‌ கண்காட்சி நேற்று (08.02.2023) துவங்கியது.



இந்த புத்தக கண்காட்சியை பல்கலைகழக துணை வேந்தர்‌ முனைவர்‌ கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.



ஆண்டு தோறும்‌ பல்கலைக்கழக நூலகத்தால்‌ நடத்தப்படும்‌ இந்த புத்தக‌ கண்காட்சியில்‌ நாடு முழுவதிலிருந்து வேளாண்‌ புத்தக பதிப்பாளர்களும்‌ விற்பனையாளர்களும்‌ கலந்து கொண்டு தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்துவர்‌.

இந்தாண்டும் வேளாண்மை சம்பந்தப்பட்ட அறிவியல்‌ பாடப்‌ பிரிவுகள்‌, பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள்‌ மற்றும்‌ பல்வேறு புதுமை படைப்புகள்‌ கண்காட்சியில்‌ இடம்‌ பெற்றிருந்தன.

இதில்‌ பல்கலைக்கழக உயர்‌ அதிகாரிகளும்‌, பேராசிரியர்களும்‌, மாணவர்களும்‌ ஆர்வத்துடன்‌ கலந்து கொண்டு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து சென்றனர்‌.

மேலும்‌ பல்கலைக்கழக நூலகத்திற்குத்‌ தேவையான புத்தகங்களை மாணவ மாணவியர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்களின்‌ பரிந்துரையின்படி பெறப்பட்டது.

இக்கண்காட்சியில்‌ பெரும்‌ திரளாக மாணவர்களும்‌, பல்கலைக்கழக ஆசிரியப்‌ பெருமக்களும்‌ கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌. இப்புத்தக கண்காட்சியில்‌ அனைத்து புத்தகங்களுக்கும்‌ 20 சதவீதம்‌ தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

இப்புத்தத கண்காட்சி பல்கலைக்கழத்தின்‌ அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கு பயனுள்ளதாக அமையும்‌. குறிப்பாக இந்தாண்டு விளையாட்டு தொடர்பான நூல்களுக்கான தனி விற்பனையகம்‌ அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...