தாராபுரத்தில் தனியார் கல்லூரி சார்பில் மரம் நடும் விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பிஷப் தார்ப் கல்லூரி மற்றும் டாஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பல்வேறு வகையிலான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தாராபுரத்தில் உள்ள பிஷப் தார்ப் கல்லூரியில், டாஸ் அறக்கட்டளை மற்றும் பிஷப் தார்ப் கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தில், முதல்வர் முனைவர் விக்டர் லாசரஸ் தலைமையில், மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் குமார் மற்றும் சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஹெலின் பிரேமாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இதில் டாஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாய் பிரசாந்த், பொதுச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரம் நடுதல் முக்கியத்துவம் குறித்தும் மரம் நன்மையையும், சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை மாணவ மாணவிகளிடையே எடுத்துரைத்தனர்.



திருச்சி டாஸ் அறக்கட்டளை குழுவினர் பிஷப் தார்ப் கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு 500க்கு மேற்பட்ட பல்வேறு விதமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.



இதில் மகாகனி, நாவல், எழிலைப்பாலை, நீர் மருது, மகிழும், கொன்றை, வாகை, அத்தி, நகாமரம், வாதாம், செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் பிரேம்நாத், சமூக சேவகர் டாக்டர் சிவசங்கர் ஜெகதீஷ் பாபு, நாட்டு நலப்பணி அலுவலர் ராஜேஷ், நளினி ஜெயக்குமாரி, ஏஞ்சலின் பிரபா மற்றும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...