வால்பாறை அருகே பழங்குடியின கிராமத்தில் சார் ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

கோவை வால்பாறை அருகேயுள்ள பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சாலை, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வன சரகத்தில் சுமார் 8 பழங்குடியின மக்கள் வாழும் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் வால்பாறை வனச்சரகத்தில் பழங்குடியின கிராமத்திலும் மற்றும் மானாம்பள்ளி வன சரகத்தில் சின்கோனா பழங்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இதில், பயிற்சி சார் ஆட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர் ஜெகதீஷ் மற்றும் பழங்குடியினர் வட்டாசியர் தணிகைவேல், வனத்துறை அதிகாரி மணிகண்டன் வெங்கடேஷ் மற்றும் 21 வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஆதிவாசி மக்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை மக்கள் சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர். வீடுகளுக்கு மின்சார வசதி வேண்டும். சாலை வசதி வேண்டும். குடிதண்ணீர் வசதி வேண்டும்.



சிங்கோனா பகுதியில் வனப்பகுதியில் சேகரிக்கும் தேன், மிளகு, காப்பி, ஏலக்காய் போன்ற பயிர்களை விற்பனை செய்ய விற்பனை கூடம் வேண்டும். குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் போன்றவை வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.



இதுபோன்ற பழங்குடி கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்த மனுவை சார் ஆட்சியரிடம் வழங்கினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...