கோவை கவுண்டம்பாளையத்தில் குட்கா விற்பனை - மளிகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதை பொருட்களை விற்பனை செய்த மளிகைக்கடை உரிமையாளர்கள் தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை சிலர் மளிகைக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் தலைமையிலான குழு, கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மளிகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய குட்கா, பான்மசாலா போதை பொருட்களை அங்குள்ள தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரின் மளிகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

இதுதொடர்பாக மளிகைக்கடை உரிமையாளர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...