வால்பாறையில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரல் - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பாதுகாப்பாக நடமாட வேண்டுமென பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வனப்பகுதியிலிருந்து இங்கு நுழையும் சிறுத்தைகள், வீடுகளில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு, பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி கொன்று தூக்கிச்செல்வது தொடர்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை காமராஜர் நகர் சாலை குடியிருப்பு பகுதியில் இருந்து இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையில் கடந்து சென்றது. இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர்.



சாலையைக் கடக்கும் அந்தச் சிறுத்தை வனப்பகுதிக்குள் செல்வதுபோல் பதிவாகியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையடுத்து, புதுத்தோட்ட பகுதியில் இருந்து, வால்பாறைக்கு வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும்போது கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், வனவிலங்குகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...