திருப்பூர் உடுமலையில் கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை அமோகம்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னதாகவே, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தர்பூசணி பழ விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் கருத்து.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சீசனுக்கு முன்னதாகவே, தர்பூசணி விற்பனை களைகட்டி வருகிறது.

உடுமலை சுற்று வட்டார பகுதிகளுக்கு, கோடை காலத்தை சமாளிக்க, திண்டிவனம் உட்பட பகுதிகளில் இருந்து, தர்பூசணி விற்பனைக்காக, கொண்டு வரப்படுகிறது. இச்சீசனை இலக்கு வைத்து, உடுமலை பகுதியிலும், தர்பூசணி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தை இலக்காக வைத்து, நுாற்றுக்கணக்கான ஏக்கரில், தர்பூசணி நடவு செய்யப்பட்டு, தொடர் மழையால், சில இடங்களில் பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிப்பு இல்லாத பகுதிகளில், அறுவடை இன்னமும் துவங்காத நிலையில், வழக்கத்தை விட முன்னதாகவே பிற மாநிலங்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.



அதன்படி, ஆந்திராவில், இருந்து கிலோ, 20 ரூபாய் முதல் தர்பூசணி கொள்முதல் செய்யப்பட்டு, உடுமலை நகர பகுதியில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருவதால், வெளிமாநில தர்பூசணி விற்பனையும், களைகட்டி வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...