கோவையில் திருநங்கைகள் சமையல் கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற உணவுத் திருவிழா

தமிழகத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்த சமூக நலத்துறை சார்பில் உணவு திருவிழா நடத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு திருநங்கைகள் கோரிக்கை.



கோவை: பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்ட திருநங்கைகள் சமையல் கலைஞர்கள் சார்பில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.



பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு உணவு திருவிழாவை தொடங்கி வைத்து சிறந்த திருநங்கை சமையல் கலைஞர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் கோப்பைகளை வழங்கினர்.



கோவை பொள்ளாச்சியில் உள்ள ஏராளமான திருநங்கை சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு 20 வகையான சைவம் மற்றும் அசைவ உணவை தயாரித்தனர் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான உணவுகளை ரசித்தும் ருசித்து உண்டதோடு பார்சல்கள் பெற்று சென்றனர்.



கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் பெரும்பாலான திருநங்கைகள் சமையல் தொழில் செய்து தொழில் முனைவோர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து தொழிலில் ஆர்வம் காட்டி வருகின்றனர் தமிழக அரசு திருநங்கைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திருநங்கைகளை ஊக்குவிக்க சமூக நலத்துறை உதவியுடன் திருநங்கைகள் உணவு திருவிழாவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...