கோவையில் வழிப்பறியில் ஈடுபட முயற்சி - குருவி சுடும் துப்பாக்கியுடன் பிடிபட்ட கூலித்தொழிலாளிகள்!

கோவையில் குருவி சுடும் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற சமயபுரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கூலி வேலை செய்து வந்த நிலையில், குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்காக வழிப்பறியை தேர்வு செய்து விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் 3 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர். ரோந்து போலீசார் அவ்வழியாக சென்ற போது, சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில், அந்த 3 பேரும் குருவி சுடும் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார், உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அந்த விசாரணையில், மூன்று நபர்களும் கூலி தொழிலாளிகள் என்பதும், அவர்களில், சமயபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார், சந்திரசேகர் மற்றும் கௌதம் கர்நாடகாவில் கட்டிட வேலை செய்தவர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இந்த 3 பேரும் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வந்ததோடு, அவ்வப்போது குருவி சுடும் வேலையிலும் ஈடுபட்டுவந்துளள்னர்.

இந்த குருவி சுடுகின்ற துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபடலாம் என அவர் திட்டமிட்டிருந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான நபர்களிடமிருந்து குருவி சுடுகின்ற துப்பாக்கி, பை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவை எதிர்த்து கோவையில் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் தலைமையில் பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்படும்...