உடுமலையில் பனிப்பொழிவால் தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் தக்காளி விலை 14 கிலோ கொண்ட பெட்டி 350 ரூபாயில் இருந்து 160 ரூபாயாக சரிவு. இந்த விலை வீழ்ச்சியால் போக்குவரத்து செலவுக்குக்கூட கட்டுபடியாகாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை.


கோவை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி தற்போது சாகுபடிசெய்யப்பட்டுள்த. இங்கு விளையும் தக்காளியை, விவசாயிகள் உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை வருகின்றனர்.



உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வரும் வியாபாரிகள், தக்காளியை கொள்முதல் செய்துவருகின்றனர். கடந்த சில வாரமாக, உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வியாபாரிகள் வருகை குறைந்ததால், விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த மாதம், 14 கிலோ கொண்ட பெட்டி, 350 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது ரகத்திற்கு ஏற்ப, 160 முதல், 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. தொடர் பனிப்பொழிவு காரணமாக தக்காளிச் செடி மற்றும் காய்கள் பாதித்து மகசூல் குறைந்துள்ள நிலையில், தொடர் விலை சரிவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, ஆயிரம் 40 வரை ரூபாய் செலவாகிறது. நோய் தாக்குதல், சீதோஷ்ண நிலை மாறி அதிக பனிப்பொழிவு காரணமாக, தக்காளி சாகுபடி பாதித்துள்ளன. அறுவடை செய்த பழங்களில், பெருமளவு அழுகி வீணாகி வருகிறது.

இந்நிலையில், உடுமலை சந்தையில், தக்காளி தொடர்ந்து விலை வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், போக்குவரத்து செலவுக்குக்கூடகட்டுபடியாகாத நிலை உள்ளது. தக்காளி விலை வீழ்ச்சியை தடுக்க, சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கவும், தக்காளி சாஸ் தொழிற்சாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...