கோவை குண்டுவெடிப்பு தினம் - மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

கோவையில் 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.



கோவை: கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 2050 மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் நாளை பிப்ரவரி 14 ஆம் தேதியையொட்டி கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



குறிப்பாக ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.



மேலும் வெளியே உட்கார்ந்து இருக்கும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, அசம்பாவித சம்பவங்களை தடுக்க 2 டிஐஜி, 4 போலீஸ் சூப்பிரண்டு, 18 உதவி ஆணையர், 225 கமெண்டோ போலீசார் உள்ளிட்ட 3000 பேர் கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...