ஜி.ஆர்.டி கல்லூரி சார்பில் 'சுவட்ச் மாரத்தான்'


ஜி.ஆர்.டி கலை அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'சுவட்ச் மாரத்தான்' என்னும் தூய்மை பணி நிகழ்ச்சி  இன்று காலை அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முன்பு நடைபெற்றது. இதனை ஜி.ஆர்.டி கல்வி நிறுவன இயக்குநர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் ராமச்சந்திரன் ஒளி தீபம் ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.



இந்த தூய்மை பணி நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முதல் தொடங்கி ஆர்.ஜி புதூர் வரை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாரும் சாலையில் ஓடி சென்றும் பொதுமக்களுக்கு தூய்மையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 1500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குழுவாக பிரிந்து கொண்டு சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். இப்பணி காலை 7 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இது குறித்து கல்லூரி மாணவி கூறுகையில்; பாரத பிரதமர் அறிவுரையின்படி தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் எங்கள் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைத்து இப்பணியினை காலை முதல் செய்து வருகிறோம். எங்களுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தூய்மை பணியின் மூலம் பொதுமக்களுக்கு எங்களுடைய இந்த விழிப்புணர்வு சென்றடையும். கல்லூரி மாணவர்கள் இப்பணியை ஆர்வத்துடன் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.



Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...