தாராபுரத்தில் முதலையைப் பிடிக்கும் முயற்சி தோல்வி - தேடுதல் வேட்டை தொடரும் என வனத்துறை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய அமராவதி ஆற்று பாலம் அருகே நடமாடிவரும் ராட்சத முதலையை பிடிக்கும் வனத்துறையின் முதல் கட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. தேடுதல் வேட்டை மீண்டும் தொடரும் என வனத்துறை அறிவிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீத்தக்காடு மற்றும் தாளக்கரை, மணலூர், அமராவதி தடுப்பணை உள்ளிட்ட நான்கு இடங்களில் முதலை இருந்து வந்த நிலையில் முதலையை பிடிப்பதற்காக வனச்சரகர் தனபால் மற்றும் வனக்காப்பாளர் பாபு வாசர் அன்னபூரணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.



நேற்று காலை 10 மணியளவில் அமராவதி புது ஆற்று பாலத்திற்கு முதலையை பிடிப்பதற்காக வந்தனர். அப்போது, வலையை வீசி முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இரண்டும் முறை முதலை வலையை அறுத்துக்கொண்டு தப்பி சென்றது. இதனால், முதல் நாள் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், முதலையை பிடிக்கும் பணி தொடரும் என வன சரகர் தனபால் தெரிவித்தார்.



மேலும், முதலை நடமாட்டம் பற்றிய தகவல் அறிந்த தாராபுரம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் மற்றும் தாராபுரம் நகராட்சி ஆணையாளர் ராமர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடமான புதிய அமராவதி ஆற்றுப்பாலத்திற்கு வந்து பார்வையிட்டனர்.



இதுகுறித்து காங்கேயம் வனச்சரகர் தனபால் கூறுகையில், சீதக்காடு உள்ளிட்ட நான்கு இடங்களில் முதலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாளக்கரை என்ற இடத்தில் பார்த்த முதலை மட்டுமே உருவ அளவில் பெரிய முதலை. தாளக்கரை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதாலும் முதலையை பிடிக்க முடியவில்லை.

தற்போது அமராவதி புதிய ஆற்றுப்பாலம் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ஆற்றில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் வனதுறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் முதலையை பிடிப்பதற்காக வலையை வீசி பிடிக்க முயன்றனர். இருப்பினும், முதலை இரண்டு முறை தப்பி சென்றது. இதனால் முதலில் பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. மீண்டும் முதலையை பிடிக்கும் பணி தொடரும்.

2ம் கட்ட தேடுதல் வேட்டையில் வேறு வலைகள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த முதலை பெரிய அளவில் ஆக்ரோஷம் இல்லாமல் இருப்பதாகவும் வனச்சரகர் தனபால் தெரிவித்தார்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...