கோவை ஈஷாவில்‌ கோலாகலமாக தொடங்கிய 'யக்ஷா' கலை திருவிழா!

கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று (பிப்‌.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண்‌ அறக்கட்டளையின்‌ நிர்வாக அறங்காவலர்‌ ரமணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதுதொடர்பாக ஈஷா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈஷாவின்‌ மஹாசிவராத்திரி விழா வரும்‌ 18ஆம்‌ தேதி மிக விமரிசையாகவும்‌, பிரம்மாண்டமாகவும்‌ கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா இன்று மாலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சி கலாச்சாரம்‌, இசை மற்றும்‌ நடனத்தின்‌ செறிவை பறைசாற்றும்‌ விதமாக உலகப்புகழ்‌ பெற்ற கலைஞர்களைக்‌ கொண்டு நடத்தப்படுகிறது.



விழாவின்‌ தொடக்கமாக பண்டிட்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் அவரது,‌ அற்புதமான இசை, அங்கு கூடியிருந்த அனைவரையும்‌ மெய்‌ மறக்கச்‌ செய்தது. உலகம்‌ முழுவதும்‌ இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ இந்த நிகழ்ச்சியை நேரில்‌ கண்டு களித்தனர்‌.

அகில இந்திய வானொலியில்‌ 'ஏ-டாப்‌' கிரேடு பெற்ற, 'கிரானா கரானா-வின்‌ ஒளி' என வர்ணிக்கப்படும்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டி, பண்டிட்‌. ஜஸ்ராஜ்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, யங்‌ மேஸ்ட்ரோ விருது, மேவதி கரானா சங்கீத்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, சண்முகானந்தா சங்கீத்‌ ஷிரோமணி விருது போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்‌ தொடர்ந்து நாளை (பிப்‌. 16) புல்லாங்குழல்‌ இசைக்கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சியும்‌, நாளை மறுநாள்‌ (பிப்‌. 17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகள்‌ ஈஷாவில்‌ உள்ள சர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 7 மணி முதல்‌ 9 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...