கோவை பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை - நெல்லை இளைஞர் கைது!

நெல்லை மாவட்டம், செண்பகராமன் நல்லூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், கோவையை சேர்ந்த 25 வயது பெண்ணின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


கோவை: நெல்லை மாவட்டம் செண்பகராமன் நல்லூர் பகுதியை சேர்நதவர் மணிகண்டன் (வயது31).



இவர் கேரள மாநிலம் மலப்புரம் பேக்கிரியில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் ஜஸ்டின் என்ற பெயரில் கணக்கை ஆரம்பித்திருக்கின்றார்.

பின்னர், கோவையை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இருப்பினும், மணிகண்டன் ஜஸ்டின் என்ற பெயரிலேயே, அந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியிருக்கிறார்.

அப்போது அந்த பெண் தனது தனிப்பட்ட புகைப்படங்களை மணிகண்டனுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், அந்த பெண் மணிகண்டனிடம் பேசாமல் இருந்து வந்தார்.

இதனால், ஆத்திரமுடனிருந்த மணிகண்டன் சமூக வலைத்தளத்தில் பல்வேறு போலி கணக்குகளை ஆரம்பித்து அந்த பெண்ணிற்கு தொடர்ந்து தொல்லை தந்திருக்கின்றான். மணிகண்டன் அந்த பெண்ணை பாலியல் தொழிலாளிபோல் சித்தரித்து Item Girl Coimbatore என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து, அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, மணிகண்டன் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். முன் பின் தெரியாத நபர்களிடம் சமூக வலைதளங்களில் பெண்கள் தொடர்பில் இருக்க கூடாதென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...