ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ரூ.35 கோடி செலவு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையரிடம் மனு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 40,000 வாக்காளர்கள் போலியாகச் சேர்த்து, திருமங்கலம் போல புதுபார்முலாவை திமுக கடைப்பிடித்து வருகின்றனர். தொகுதிக்கு பண விநியோகம் சீராக செல்வதற்காக, அருகே உள்ள மாவட்டங்களில் முதல்வர் முகாமிட்டு ஆய்வு செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் விதிமீறல்களில் ஈடுபடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் மனு அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பழனிகுமாரை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,



ஈரோடு கிழக்கு தொகுதிகளில் 30 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் ஒட்டகம் மீது அமர்ந்து வாக்கு சேகரிப்பது, டீ, பஜ்ஜி மற்றும் வடை போட்டுக் கொடுத்து செய்த செயல்கள் அனைத்தும் கோமாளித்தனத்தின் உச்சக்கட்டமாக உள்ளது.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் நாட்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க, தொகுதியில் பந்தல் அமைத்து அவர்களுக்கு பணம், காய்கறிகள், இறைச்சி எனக் கொடுத்து வருகின்றனர். எனினும் மக்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு இந்த தேர்தலில் சவுக்கடி கொடுப்பார்கள்.

குறிப்பாக தேர்தல் விதிமுறைகளை மீறிதிமுக-வினர் சுமார் ரூ.35 கோடி வரை செலவுகள் செய்யப்பட்டதாகக்கூறி அதற்கான பட்டியலையும் வெளியிட்ட அவர், 40,000 வாக்காளர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.திருமங்கலம் பார்முலா போன்ற, புது பார்முலாவை திமுக கடைப்பிடிப்பதாகவும், தொகுதிக்கு பண விநியோகம் சீராக செல்வதற்காக, அருகே உள்ள மாவட்டங்களில் முதல்வர் முகாமிட்டு ஆய்வு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.



தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுள்ள நிலையில் வேங்கைவயல் பகுதிக்கு முதலமைச்சர் செல்லாதது ஏன் எனவும், அவர் கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினர் அனைவரும் காரில் கட்சி கொடி கட்டி வலம் வருகிறார்கள், பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள், இது சட்டப்படி விதிமீறல் ஆகும்.

தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் இயேசு கிறிஸ்துவின் படத்தைப் போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கடவுளை தேர்தல் பிரச்சாரத்தில் விளம்பரமாகப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி திமுக கூட்டணியினர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓபிஎஸ்-யை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...