உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் - முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

உடுமலை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டத்தில், காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம், ஒன்றிய தலைவர் எலிசபெத் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி வழங்கும் பணியை சத்துணவு ஊழியர் பொறுப்பில் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் ஒன்றிய பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய துணைத் தலைவர் மாலதி, ஒன்றிய செயலாளர் ஆனந்தி, ஒன்றிய பொருளாளர் சகிலா பானு, ஒன்றிய இணைச் செயலாளர் சித்ரா, ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, கவிதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...