கோவையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம் - மக்கள் விடுதலை முன்னணி புகார்!

கோவை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள் விடுதலை முன்னணியினர், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கோவை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், கோவை மாவட்டத்தில் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கு மண்டல அமைப்பாளர் ராஜன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தமிழ்நாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.



மேலும், கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசு அறிவித்துள்ள நேரத்தை தாண்டியும் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், இதுபோன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜன் கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...